பதிவுலகம்
பிச்சை புகினும் கற்கை நன்றே…
by nirujah on May.26, 2011, under பொது
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – ஔவைப்பாட்டி
பிச்சைகாரர்கள்: நான் இந்தச் சொல்லைக் பயன்படுத்துவது சரியோ எனக்குத் தெரியாது; இருந்தாலும் வேறு கௌரவமான சொல் எனக்கு கிடைக்கவில்லை. முன்பெல்லாம் நாம் வாழுகின்ற இந்த வறிய நாடுகளிலோ அல்லது வளர்ந்து வரும் நாடுகளிலோ தான் பிச்சைக்காரர்கள் இருக்கின்றார்கள் என நினைத்திருந்தேன். பின்னர், சற்று வெளியே செல்ல நேர்ந்த போது தான், ஐக்கிய இரச்சியம், அமெரிக்கா, கனடா போன்ற அதிவளர்ச்சி பெற்ற நாடுகளிலும் இவர்கள் இருக்கின்றார்கள் என அறிந்து கொண்டேன். ஆனால் என்ன, அந்தந்த நாடுகளுக்கேற்ப அவர்களின் வாழ்கைத்தரமும் தமது தொழிலுக்கு பயன்படுத்தும் யுக்திகளும் வேறுபடுகின்றன.
இலங்கையில் உள்ள பிச்சைக்காரர்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் பலவகை உண்டு. உண்மையாகவே உடல் ஊணமுற்றவர்களாக வேறு தொழில் செய்ய முடியாதவர்கள், உடல் வலு நிறையவே இருந்தும் பிச்சை எடுப்பவர்கள், உடல் வலும் மற்றும் கல்வி வளம் இருந்தும் பிச்சை எடுப்பவர்கள், இயற்கை அனர்த்தம் காரணமாக பிச்சை எடுப்பவர்கள் என்று வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.
பிச்சை எடுப்பவர்களில் எனக்கு அதிக பரிதாபத்தையும், அதிக எரிச்சலையும் தருபவர்கள் சிறுவர்கள். சிறுவர்கள் எனும் போது, கதைக்கத் முடிந்தவர்கள், பயம், வெட்கம், சமூக அந்தஸ்து, அவர்களின் எதிர்காலம் என எதைப் பற்றியும் எண்ணிப்பார்க்க முடியாதவர்கள். இவர்கள் தமது குடும்ப சூழ்நிலையாலோ அல்லது அனாதரவாக்கப்பட்டதாலோ தான் பிச்சை எடுக்கின்றார்கள் என்றாலும், அவர்களின் எதிர்காலத்தை நினைக்கும் போது நான் சற்றே மனம் வருந்தியதுண்டு. இன்னும் எவ்வளவு காலம் தான் இவர்கள் இப்படியே இருக்கப் போகின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சில வேளைகளில், இவர்கள் வீதியால் செல்லும் எமது கையைப் பிடித்துக்கொண்டு, கண்டிப்பாக ஏதாவது தரவேண்டும் என்பது போன்ற ஒரு மிரட்டும் தொனியில் பேசுவார்கள். பொதுவாக இத்தகைய சிறுவர்களுக்கு நான் ஒரு போதும் காசு போட்டது இல்லை. இது போன்ற சிறுவர்களுக்கு காசு குடுப்பதன் மூலம் இவர்களை நாம் பிச்சை எடுப்பதற்கு இன்னும் ஊக்குவிப்பது போன்று உணர்வதோடு மட்டுமல்லாமல், பிச்சை எடுத்து பிழைக்க முடியாமல் போனால் ஏதாவது ஒரு வேலைக்காவது போய் வாழ முனைவார்கள் என்ற நப்பாசையும் தான்.

பிச்சைஎடுப்பவர்களைப் பற்றிப் பேசும் போது, கண்டிப்பாக கணவன் மனைவியாக இருவருமே பிச்சை எடுத்து வாழ்வதோடு தமக்கு என்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்பவர்களை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இப்படியான தரப்பினரை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். இவர்களைப் பார்க்கும் போது கண்டம் துண்டமாக வெட்டியெறியவேண்டும் என்னும் அளவுக்கு கோபம் தான் வருகிறது. இவர்களுக்கு உடல் வலு இருக்கிறது. இருந்தும், சோம்பேறித்தனமாக பிச்சை எடுக்கின்றார்கள். அவர்கள் தான் அப்படி வாழ்கின்றார்கள் என்றால், வருடத்துக்கு ஒன்றாக நான்கு ஐந்து என்று குழந்தைகளையும் பெற்று தெருவில், நடுத்தெருவில் பிச்சை எடுக்க விடுகின்றார்கள். கேவலம் இருவரின் உடல் சுகத்தினால் வருகின்ற ஒரு ஜீவன் நாளை எவ்வளவு வருந்தப்போகின்றது என்பதைப் பற்றி இவர்களால் ஏன் தான் சிந்திக்க முடியாமல் இருக்கின்றதோ!!! இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பல இருந்தாலும், தெகிவளை சந்தியில் உள்ள பிரபல ஆடை விற்பனைக்கடையை அண்டிய பகுதியில் உள்ள ஒரு தம்பதிப் பிச்சைக்காரர்கள் சிறந்த உதாரணம். இவர்களை நான் குறைந்தது 2004ல் இருந்து பார்க்கின்றேன். அவர்களும் மாறுவதாக இல்லை. குழந்தைகள் பிறப்பதும் நிற்பதாக இல்லை.
அடுத்த வகையினர் பேரூந்து போன்ற பொது வாகனங்களில் ஏறி பிச்சை எடுப்பவர்கள். சில வேளைகளில் கணக்கு போட்டு பார்த்தால் நாமெல்லேம் இவர்கள் மேல் பொறாமைப்படவேண்டும். குறிப்பாக ஒருவர் ஒரு பேரூந்தில் ஏறி இறங்கினால் 20 ரூபாவில் இருந்து 40 ரூபா வரை இவருக்கு கிடைக்கும். சராசரியாக 25 ரூபாய் என்று கணக்கு வைத்துக்கொண்டு சிறிய கணக்கீடு ஒன்றைப் பார்ப்போம்:
- ஒருவருக்கு, ஒரு பேரூந்தில் செலவழியும் நேரம் 10 நிமிடங்கள்
- ஒரு மணித்தியாலத்துக்கு குறைந்தது 5 பேரூந்துகளில் ஏறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
- எனவே அவர் ஒரு மணித்தியாலத்தில் 5×25 = 125 ரூபாய் கிடைக்கப் பெறுகிறார்.
- ஒரு நாளைக்கு, காலை எட்டு மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணிவரை கண்டிப்பாக மேலே கூறிய கணக்கின்படி அண்ணளவு வருமானம் இருக்கும்.
- ஆக, உணவு வேளை, இடைவேளை போன்றவற்றுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கினாலும் இவர் நாளொன்றுக்கு 12மணிநேரம் பிச்சை எடுக்கலாம்.
- ஆகவே 125×12 = 1500 ரூபாய் நாள் வருமானம்.
- அவருக்கு அந்த குறிப்பிட்ட நாளில் இரண்டு நேர சாப்பாடாவது தானமாக கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.
- ஆக, அவருக்கு ஒரு வேளைச் சாப்பாட்டுக்கான செலவும் மற்றும் நானாவித செலவுமாக கூடியது 300 ரூபாய் செலவு செய்தால், ஒரு நாளைக்கு அவர் 1200 ரூபாய் சேமிக்கலாம்.
- இவ்வாறாக, மாதத்துக்கு, 1200×30 = 36000 ரூபாய் சேமிக்கலாம்.
- தவிர, இவர்களுக்கு வீடு கிடையாது. எனவே மின்கட்டணம், நீர்க்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வருமான வரி என்று எதுவுமே கிடையாது. எனவே, சேமிப்பு அப்படியே இருக்கும்.
- ஒரு மாதத்தில் 36000 என்றால் ஒரு ஆண்டில் 4,32,000 ரூபாயும் ஐந்து வருடங்களில் 21,60,000 ரூபாயும் சேமிக்க முடியும்.
இனிமேல் பேரூந்தில் யாராவது பிச்சை எடுக்க வந்தால், அவரை மில்லியனரை உபசரிப்பது போல் மரியாதை குடுங்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் பேரூந்தில் நடந்த சம்பவம் ஒன்று. ஒருவர் பேரூந்திலே பிச்சை எடுக்கும் போது, பிரயாணி ஒருவர் தன்னிடம் இருந்த ஒரு ரூபாவை அவருடைய அந்த மத்தளம் போல் தட்டும் கருவிக்குள் போட்டார். அந்த பிச்சைக்காரனோ, அந்த ஒரு ரூபாவை மீண்டும் அவரிடமே திருப்பிக்குடுத்து அவரையே வைத்திருக்கச் சொன்னான். ஒரு வேளை நான் போட்ட கணக்குக்கு ஏற்ப வாழ்பவரோ என்னவோ?
இதைவிட, கட்புலன் குறைந்தவர், அங்கவீனர்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோர் என பலரும் பலவழிகளில் பிச்சை எடுக்கின்றனர். என்ன இருந்தாலும், நாளாந்தம் தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத பல குடும்பங்கள் நம்மிடையே பல இருக்கின்றன. அதே போல், பிச்சை எடுத்து தண்ணி அடிப்பவர்களும் இதே சமுதாயத்தில் தான் வாழ்கின்றார்கள்.
பாத்திரம் அறிந்து பிச்சையிடு
பாலியல் தொழிலாளர்களின் இரகசியங்கள்
by nirujah on Feb.09, 2011, under பதிவுலகம்
இவ்வுலகில் பாலியல் தொழில் இல்லாத நாடே இல்லை எனலாம். பொதுவாக எல்லா நாடுகளிலும் பாலியல் தொழில் சட்டபூர்வமாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவே நடந்து கொண்டு தான் இருக்கிறது. வீதியோரத்தில் இருந்து தமது தொழிலுக்காக ஆட்களைப் பிடிப்பதில் இருந்து, முகவர் மூலமாகவோ அல்லது குறிப்பிட சில நட்ச்சத்திர விடுதிகள் மூலமாகவோ தமது வருமானத்துக்காக தொழில் செய்பவர்கள் இருக்கின்றார்கள். இதை விட பொழுதுபோக்குக்காகவோ அல்லது ஒரு வித்தியாசமான அனுபவத்துக்காகவோ இந்த தொழிலில் ஈடுபடுவர்களும் இருக்கின்றார்கள். இந்த எல்லா வகையிலுமான பாலியல் தொழிலாளர்கள் இலங்கையிலும் இருக்கின்றார்கள்.
இவர்களின் இரகசியங்கள் என நான் கூறவந்த விடயம், இவர்கள் கண்டிப்பாக வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் வைத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்கள் பற்றியது. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது வாடிக்கையாளர்களின் தொடர்பு, தொழிலில் ஈடுபடுபவர்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்காக சிலபொருட்களை அல்லது சில விடயங்களை வைத்திருப்பதை முக்கியமாகக் கருதுகிறார்கள்.
கண்டிப்பாக வைத்திருக்கும் பொருட்கள்
- குறைந்தது இரண்டு தொலைபேசிகள்: தமது வாடிக்கையாளர்களினுடைய தொடர்பாடலுக்காகவும், சிலவேளைகளில் அவர்களின் தொலைபேசிகள் வேண்டுமென்றே களவாடப்படுவதாலும் பாலியல் தொழிலாளர்கள் குறைந்தது இரண்டு தொலைபேசிகளாவது வைத்திருக்கின்றார்கள்.
- உள்ளாடை: இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக மட்டுமன்றி, சில ஆண்கள் அவர் அணிந்திருந்த உள்ளாடைகளை விரும்பி எடுத்துச் செல்வதோடு அதற்காக பணமும் கொடுக்கிறார்களாம்.
- பன்டெஜ் மற்றும் சிராய்ப்புகளுக்கு பூசும் மருந்துகள்: தமது தொழிலில் போது உடலில் ஏற்படக்கூடிய காயங்கள், சிராய்ப்புகள் போன்றவற்றில் இருந்து விரைவாக குணமாவதற்கு இவற்றைப் பயன்படுத்துகின்றார்கள்.
- சுவீங்கம் மற்றும் மின்ட்ஸ் ( chewing gum & mints): தொழில் நேரங்களில் தமது வாய் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்களாம்.
- ஆணுறைகள் மற்றும் உராய்வுநீக்கி எண்ணெய்கள்: உடலுறவு நேரங்களில் பெரும்பாலான ஆண்கள் ஆணுறையைப் பயன்படுத்துவதாலும், அதனை பாலியல் தொழிலாளர்களிடமே எதிர்பார்ப்பதாலும் இவை அத்தியாவசியமாகின்றது. இருப்பினும், சில ஆண்கள் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ள விரும்புகின்றார்களாம். இதற்கு 25% இருந்து 30% அதிகமாக பணம் பெறப்படுகின்றதாம்.
கண்டிப்பாக வைத்திருக்க விரும்பாத பொருட்கள்
- பெயர் விபரங்களுடன் கூடிய தொலைபேசிகள்: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாலியல் தொழிலாளர்கள் தமது அடையாளத்தை வெளிக்காட்ட விரும்புவதில்லையாம்.
- அடையாள அட்டைகள்: இதுவும் பாலியல் தொழிலாளர்களின் சுயவிபரங்களை வெளிப்படுத்த விடாமல் தவிர்க்கும் ஒரு முயற்சியாம்.
- வங்கி அட்டைகள் மற்று கடன் அட்டைகள்: ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் அவர்கள் வதிவிடம் பற்றிய விபரங்கள் இவ்வகையான அட்டைகள் மூலமாக தெரியவருவதைத் தடுப்பதற்காகவும் இவற்றை வைத்திருப்பதை தவிர்க்கின்றார்கள்.
- விடுதி பற்றுச்சீட்டுகள்: எப்போதுமே ஆண்கள் விடுதி மற்றும் பிற செலவினங்களுக்கான பணத்தைச் செலுத்தும் முட்டாள்களாக இருப்பதால் இது போன்ற பற்றுச்சீட்டுகள் கையாள்வதற்கான்ன தேவை அவர்களுக்கு இருந்ததே இல்லையாம்.
இது தவிர வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள அனேகமான பாலியல் தொழிலாளர்கள் இத்தொழிலை முழுநேரமாக செய்வதில்லையாம். பகல் நேரங்களில் இவர்களின் கல்விக்கு தகுந்த ஏதாவது ஒரு வேலையைச் செய்பவர்களாகவே இருக்கின்றார்கள். முகவர்கள் மூலமாக வாடிக்கையாளர்களைப் பெறுபவர்கள் பொதுவாக 25% வரையான வருமானத்தை முகவர்களுக்கு செலுத்த வேண்டியவர்களாகவும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இது 35% வரை செல்வதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
மேலும், முன்னையகாலத்தில் மேலைநாடுகளில் தமது தொழில் நடவடிக்கைகளின் தகவல் மையமாக இணையத் தளங்களை வைத்திருந்தவர்கள், தற்போது முகப்புத்தகம் போன்ற சமூகவலையமைப்பு மூலம் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பது கூடுதல் தகவல்.
ஃபக்கோடா [04-02-11]
by nirujah on Feb.04, 2011, under அனுபவங்கள், ஈழம், பதிவுலகம்
என்னடா இவன் புதுசா ஃபக்கோடாவோட ஆரபிச்சிருக்கிறானே எண்டு யாரும் திட்டாதீங்க. அப்பப்ப போடுற பதிவுகளுக்கு ஏதாவது தலைப்பு வைக்க வேணும் என்டு கன நாலா யோசிச்சு கொண்டு இருந்தனான். நூடுல்ஸ், பர்கர், பாஸ்ட்டா என்டு எல்லா பெயரும் போய்விட, கடைசியில் கடந்த பதிவர் சந்திப்பில் பிரபலமான ஃபக்கோடா தான் மிஞ்சியது. சரி, ஒருத்தரும் அதற்கு இதுவரை சொந்தம் கொண்டாடாதபடியால் இனி அப்பப்ப ஃபக்கோடா வரும். பல நாட்களாக எழுத நினைத்தும், அதற்கும் அதிகமாக ஆணிபுடுங்க வேண்டியிருந்ததால் எழுத முடியவில்லை.
#tnfisherman
இந்த விடயம் பற்றி நான் கீச்சுவில் ஏற்கனவே சொல்லியிருந்ததால், இது பற்றி நிகழ்ந்த எந்தவிதமான விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. தனிப்பதிவும் போடவில்லை.
- இலங்கை மீனவர்களின் வளம் சுரண்டப்படுகின்றது.
- இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி உள்ளேவருகின்றார்கள்.
- பாரிய ரோலர்களில் வருகின்றவர்களினால் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன.
- இலங்கைக் கடற்படை பலவேளைகளில் இந்திய மீனவர்களைக் கைது செய்தும், சிலவேளைகளில் அவர்களைக் கொலைசெய்தும் கொண்டிருக்கின்றது.
- கொல்லப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் வெறும் படகுகளில் வந்து தம் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிப்பவர்கள்.
- இதற்கெல்லாம் முடிவு கச்சதீவை திரும்பப் பெறுவது மட்டும் தான்
- நிருபமாராவ் வருகை.
- தமிழருக்கு பிரச்சனை வரும்போது எப்போதும் ஒரு மலையாளியே இலங்கைக்கு அனுப்பப்படுகின்றார்
இப்படியாக பல கருத்துக்கள் உலாவின. சற்று முன்னர் நான் கேட்ட ஒரு செய்திக்குறிப்பில் வடபகுதி மீனவர்களுக்கு இன்னமும் கடலில் மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படாதவிடத்து, தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வடபகுதிக் கடல்களில் மீன் பிடிக்கிறார்கள் என்பது தான்.
இப்படிப் பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், #tnfisherman என்று இணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அலையைப் பற்றி சிலர், அது ஒரு கண்துடைப்பு, தமிழகத்தின் அரசியல் பின்புலத்தில் உருவானது என்று பல்வேறு வகையாக விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, இந்தப்பிரச்சனையிலாவது இணையத்தில் ஒரு அலை உருவாகியிருக்கின்றது. இதற்கு பின் என்ன நடக்கின்றது என்பதை ஆராய்கின்ற சந்தர்ப்பத்தில், அதன் வலிமை வரவேற்கப்படவேண்டியது. ஒரு விடயம் கவனித்தீர்களா, இதுவரை சுமார் 500 வரையான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்திய(தமிழக), இலங்கைப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாக போடப்பட்டது. ஒரு கட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள் தொடர்ந்து தொழிலுக்கு போகாமல் பகிஷ்கரிப்பும் உண்ணாவிரதமும் இருந்தார்கள். 2003 – 2004 பகுதியில் சன் தொலைக்காட்சி இதை பூதாகாரப்படுத்தியது. இருந்தும் அன்று, இப்போது நாம் விவாதிப்பது போல் நம் இலங்கை மீனவர்களைப் பற்றி பேசவே இல்லை.
ஆக, #tnfisherman என்ற அலை, பலவிடயங்களைப் பற்றி எம்மைப் பேசத்தூண்டி இருக்கின்றது. நாமும் நமது மீனவர்களைப் பற்றி கொஞ்சமாவது பேச முற்பட்டிருக்கின்றோம். இது வெறும் காலமாற்றத்தால் உருவானதாகக்கூட இருக்கலாம். இதனை ஆதரிப்பதோ விமர்சிப்பதோ அவரவர் புரிந்துணர்தலுக்கு இயல்பானது.
சுதந்திர தினம்
இன்று இலங்கைக்கு சுதந்திர தினமாம். நல்லது. அதுவும் 63வது சுதந்திரதினமாம். அது மட்டுமல்ல, 2வது சுதந்திர தினமும் கூடவாம். கடந்த வருடம் சுதந்திர தினம் கண்டியில் கொண்டாடப்பட்டதாம். இம்முறை கதிர்காமம் என்று அழைக்கப்பட்ட கதரகமவில் கொண்டாடப்படுகின்றதாம். ஏனென்றால் இது ஒரு அனைத்து மக்களுக்கும் பொதுவான(?) வழிபாட்டுத் தலமாம்.
இயற்கை
மீண்டும் கிழக்கில் மழையும் குளிர்காலநிலையும் அதிகரித்து விட்டன. கிழக்கின் நீரேந்து பிரதேசங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மீண்டும் மக்கள் அவலங்களை எதிர்நேக்கத் தொடங்கி விட்டார்கள். இன்று காலையில் தான் மன்னர் தனது உரையில், துரித கதியில் முழு அளவில் மக்களுக்கு உதவுவோம் என்று. பாப்பம்.
இது இப்படி என்றால், ஒஸ்ரேலியாவின் குயின்ஸ்லாட் பகுதியை தாக்க ஆரம்பித்த, யாசி என்று பெயர்வைக்கப்பட்ட சூறாவளி இதுவரை பல கோடி மதிப்பான பொருட்சேதத்தை ஏற்படுத்தி உள்ளதோடு இது வரை ஒருவர் இறந்தும் இருவர் காணாமலும் போயுள்ளனர். யாசி தற்போது தொடர்ந்து ஒஸ்ரேலியாவின் குறுக்காக பயனித்துக்கொண்டிருக்கிறது. இது குயின்ஸ்டான்டை தாக்கும் போது, மணிக்கு சுமார் 290 கிமீ வேகத்தில் இருந்தது. இதன் குறுக்களவானது மிகவும் பெரியதாக கிட்டத்தட்ட முழு ஐக்கியராட்ச்சியத்தையே அதற்குள் கொள்ளும் அழவு பெரிதாக உள்ளது.
அனுராதபுரத்தின் தமிழ் எச்சங்கள்
by nirujah on Jan.11, 2011, under அனுபவங்கள், பதிவுலகம்
நீண்ட நாட்களாக எழுத நினைத்து இருந்த ஒரு விடயம் இது. கடந்த வருடம் தீபாவளிக்கு முதல் நாள், எனது உறவினர் ஒருவருடன் அனுராதபுரம் செல்ல நேர்ந்தது. அவர் பிறந்தது முதல் திருமணம் முடிக்கும் வரை, கிட்டத்தட்ட சுமார் 25 வருடங்களுக்கு மேல் அனுராதபுரத்திலேயே வாழ்ந்தவர். அது நாள் வரைக்கும் அனுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற கதையே எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் யாராவது ஓரிரு குடும்பகங்கள் தொழில் நிமிர்த்தமாக அங்கு வாழ்ந்திருக்கலாம் என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் அங்கே எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் அதிர்ச்சி, அங்கே இருந்த இரு இந்து ஆலயங்கள். ஒன்று முருகன் ஆலயம். இன்னொன்று பிள்ளையார் கோவில். முருகன், பிள்ளையார் போன்ற இந்துக் கடவுள்களை அனுராதபுரத்தில் செறிந்து வாழும் சிங்கள் மக்களும் வணங்குவது பொதுவான ஒன்று எண்டு வைத்துக்கொண்டாலும், அதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருந்தது. அங்கே பெரிய தமிழ் பாடசாலை ஒன்றும் உள்ளது. விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம் என்பது இதன் பெயர். அது மட்டுமல்லாமல், விவேகானந்த சொசைட்டி போன்ற பல நிறுவனங்களும் இருந்துள்ளன; இருக்கின்றன.

1950 களின் இறுதிக்கால கட்டத்தில் இருந்து விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களே கல்வி கற்று வந்துள்ளனர். இந்த பாடசாலை அனுராதபுர நகரின் மையப்பகுதியில் இருந்து வெறும் 1கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள்ளேயே இருக்கிறது. 1970களின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்ற இனக்கலவரங்களால், இங்கு வாழ்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் அன்றைய காலகட்டத்திலேயே வெளியேறிவிட்டனர். தற்போதும் இந்த பாடசாலை இங்கு செயற்படுகின்றது. ஆனால் தற்போது அதிகமாக முஸ்லிம் சமூகத்தவர்களே கல்வி கற்கின்றனர்.
இதைவிடக் கொடுமையான விடயம், அங்கு இருந்த ஆலயங்களில், கதிரேசன் கோவில் என அழைக்கப்படும் முருகன் ஆலயம் இந்த விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்துக்கே சொந்தமானதாம். ஆனால் 1985க்கும் பின்னர் இந்த ஆலயம் முற்றாக மூடப்பட்டிருந்ததாக அறியப்பெற்றேன். 2000ம் ஆண்டுக்கு பின்னர், ஓய்வுபெற்ற ஒரு வான்படை உத்தியோகத்தரும், பிறப்பிலே தமிழ் சைவரும் மற்றும் சிறுவயதிலிருந்தே அவர் அனுராதபுரத்திலே வசித்து வந்த ஒருவரின் ஊக்கத்தினால் மீண்டும் இக்கோயில் திறக்கப்பட்டு, பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் ஆலயமும் இவராலேயே தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதை விட, இன்னும் நகருக்கு வெளியே ஓர் அம்மன் கோவில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் போக அவகாசம் கிடைக்கவில்லை. இது தவிர, நகருக்குள்ளே பல தமிழ்க்கடைகள் தமிழ்ப் பெயர்பலகையுடன் இருந்ததையும் நான் ஆச்சரியத்துடன் பார்க்கத் தவறவில்லை.
இவை அனைத்தும் வரலாறுகள். ஒரு புராதன நகரிலே, அதுவும் இந்த நாடு விடுதலை அடைந்த பின்னர், இங்கே ஒரு தமிழ் பள்ளிகூடம் அமைக்க வேண்டிய அளவுக்கு இங்கே தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தற்போது நாம் கொழும்பில் வெள்ளவத்தையிலோ, கொட்டகெனாவிலோ அல்லது சொய்சா புரவிலோ வாழ்ந்து கொண்டிருப்பது போன்று சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருக்க சாத்தியங்கள் குறைவு. ஆகவே, தற்போது, வவுனியாவின் ஜோசப் காம்ப்க்கு அருகாமைசார்ந்த கற்குழியின் எல்லையுடனான பகுதியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசம் கண்டிபாக அனுராதபுரம் வரை ஓர் தொடர்பினை கொண்டிருந்திருக்க வேண்டும். இது தவிர, நான் அங்கு சிலருடன் கதைத்த வேளை, இப்போதும் பல தமிழ்க்குடிகள் அனுராதபுரத்திலிருந்து, மிகிந்தலை வரையான பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தமது அடையாழத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார்கள். அது தவிர, நகருக்குள் இருந்த பல வீடுகளை காண்பித்து, இவை அந்த நாட்களில் தமிழ்ர்களுக்கு சொந்தமாக இருந்ததாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நான் அதிகம் வரலாறு சார்ந்த புத்தகங்களை வாசிக்க தவறியதால் எனக்கு இவை தெரியாமல் போனதோ, அல்லது புத்தகங்களிலும் இவை இல்லையோ நான் அறியேன். ஆனால், இவை முடிந்த வரலாறுகளாக பார்க்க முடியாது. இது ஓர் தொடர்ச்சி. இடையே ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இது சற்றே மந்த கதியில் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது மீண்டும் வரலாறு வளைக்கப்பட முயலப்படுகின்றது. என்ன செய்ய, எனது உணர்வுகள் பலகாலமாகவே விரல் நுனிக்கும், தட்டச்சு விசைகளுக்கும் இடையே தற்கொலையுறுகின்றன.
2010 ஏ புறப்படு
by nirujah on Dec.31, 2010, under அனுபவங்கள், பதிவுலகம்
மில்லேனியம் தனது முதல் தசத்தை இனிதே இன்று நிறைவு செய்கின்றது. தனிப்பட்ட முறையில் இவ்வாண்டு பல்வேறுபட்ட பரந்த அனுபவங்களை எனக்கு கொடுத்திருந்தது. இந்த தசாப்ப்ததின் இறுதிப் பதிவை எனது முகப்புத்தகதில் நான் போட்ட நிலைகளுள் சிலவற்றை மீண்டு முடிக்கின்றேன்.
டேய்…! யார்ரா அங்க… 2 நாளைக்கு லண்டன்ல மழை பெய்யபோகுது…! கொட எல்லாம் வெளியில எடுத்து தூச கீச தட்டி வைங்கடா…! அண்ண நாளைக்கு தோட்டத்துக்கு போகணும்..! மொக்கை
மறுபடியும் பசிக்குதே…! இது வரை முகப்புத்தகத்தில் இறுதியாக உள்ள நிலை.
முகப்புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வபோது கவிதை என்ற பெயரில் போட்டவை:
என் உணவு வேளைகளின்
புரையேறும் நிமிடங்களைக் கேட்டுப்பார்…!
உன் நினைவலைகள் என்னைத்
தாக்கட்டுமே என்று நீர் அருந்துவதே இல்லை…!
இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்….
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்செல்கிறாயே…..???
கடலலையே….!!!
நீயும் பெண்ணின் அம்சமோ…
தெளிந்த வானமாய் ஓர் மனம் வேண்டும்….!
அதில் ஒரே சூரியனாய் நீ வேண்டும்.
உன்னொளி பெற்று நான் மதியாக வேண்டும்…!
பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே.மட்டுமல்ல
காதலின் பொழுது போக்கும் கூட…
It’s really hard for me to accept….!
You were with me when I was stressed…!
When I needed some one…!
When I wanted to pass my time…!
But…. Things has to change…!
And you cant be with me any more….!
நம்முடைய முதல் சந்திப்பு
என்னுடைய முதல் தோல்வியின்
பரிசாய்க் கிடைத்தது..! அன்று முதல்,
நம் முதல் ஸ்பரிசம்,
என் உதடுகளில் நம்முடைய முதல் முத்தம்..!
அந்த நறுமணம்..!
எனக்குத் தெரியும்..;
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும் எனக்காக நீ மரணித்தாய் என்று..!
காற்றுடன் கலந்த அந்த கடற்கரைப் பொழுதுகள்…
கல்லூரியின் பின் புறம்…!
சாரலாய் பெய்த மழையின்
மண்வாசத்தோடு சேர்ந்த உன் அருகாமை;
எப்படித்தான் முடியுமோ உன்னைவிட்டு நீங்க என்னால்..!
என் 10ம் வயதில் திருட்டுத்தனமாய் செய்ய முயன்றாலும்…!
இருபதின் ஆரம்பத்தில் என் கன்னி கழித்தவள் நீ தான்….!
அன்று முதல் எத்தனை பேர்…! விதம் விதமாய்…!
நீயாய்…, உன் தோழிகளாய்…, சகோதரிகளாய்…,
உள்நாடு… வெளிநாடு… என எத்தனை வகைகளாய்…!
கையில் ஒன்றுமே இல்லாத போது நன்பர்களிடன்
கடனாய் என… நீ ஏதாவது ஒரு உருவத்தில் தினம் கலந்துகொண்டே இருந்தாய்…!
அன்புள்ள அத்தை மகளே…! அழகே நினைவிருக்கா…!
உன் அத்தான் சீமை சென்று ஆறு மாசம் ஓடிபோச்சே…!
இத்தனை நாள் பிரிந்திருந்தும்
கழுதை உன்னை மறக்கலையே…!
இரண்டு நாள் கதைக்காட்டி நீயாரென்று கேக்கிறியே…!
பாத்தவுடன் சோழி செய்ய காத்திருடி கண்ணழகே…!
வாழ்க்கை வெறுக்குதடி…
சாகத் தோணுதடி…
சுற்றம் சலிக்குதடி…
மெத்தப் புளிக்குதடி
என்றும் நீ சொல்வது போல்…
எல்லாம் போலியடி…
போலிக்குள் ஒருவனாக…
வாழ மன ஒக்கவில்லை…
எல்லோர்க்கும் நானொருவன்…
வெறும் துருப்புச் சீடாய் பேனேனடி…
தம் வேலை முடிந்தவுடன்…
தூக்கி எறியும் உலகமடி…
அமேசனின் நீரேந்து பிரதேசங்களின்
மழைபோல் முத்தங்கள் கிடைக்கின்ற நாட்டில்…,
சகாராவின் சாரல் கூட
கிடைக்க முடியாதபடி செய்தவளே…
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.


