ஈழம்
இரயில் பயணத்தில் ஓர் கிளிநொச்சி அனுபவம்
by nirujah on Dec.15, 2010, under அனுபவங்கள், ஈழம்
இது வரை நான் எழுதிய பதிவுகளில் இது சற்றே வித்தியாசமானது. தற்போது 15ம் திகதி, மார்கழி மாதம் 2010, அதிகாலை 2:42. கொழும்பிலிருந்து வவுனியா மற்றும் தாண்டிக்குளம் நோக்கிச் செல்லும் இரவுத் தபால் தொடரூர்ந்தில் மூன்றாம் வகுப்பு இருக்கை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். என்னைச் சூழ சுமார் பத்து பயணிகள் இருக்கின்றார்கள். இவர்களுள் இரு முதியவர்கள் தனித் தனியே வந்தவர்கள். ஐந்து பெண்களும் ஒரு ஆண்ணுமாக இன்னொரு அறுவர் கொண்ட குழு தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அறுவரிடமும் நான் பேசியதையே இந்த பதிவில் தரலாம் என இருக்கின்றேன்.
தலைப்பே இல்லாத ஒரு கவிதை
by nirujah on Jan.02, 2009, under ஈழம், கவிதைகள்
ஏனோ தெரியவில்லை…!
ஏதாவது எழுதவேண்டும்
போல் இருந்தது.
கண்ணை மூடிச்
சிந்தித்தேன்…!
விண்ணைக் கூர்ந்தும்
சிந்திதேன்…!
என்னைக் கொண்டு
முடியுமான வரை
எண்ணிப்பார்த்தேன்…!
கார் இருட்டில்
ஊசி தேடுவதைப் போல…
நார் உரிக்க
கல்லை எடுத்தது போல…
ஏர் எடுத்த
முடவன் போல…
வார்த்தை வர
மறுத்தே தொலைத்தது…!
காற்றைக்கேட்டேன்
உதவி நில்லென்று…!
பார்த்துச் சிரித்து
ஏளனம் செய்தது…!
எங்கே போவேன்
வார்த்தை தேடி
எங்கே கிடைக்கும்
நற்றமிழ் பள்ளி
இங்கே வாழ்ந்தால்
இருப்பதும் மறக்கும்
வேண்டும் எனக்கோர்
மணித்திரு நாடு
ஆண்டும் அவையும்
தமிழே செய்யனும்..!
வாண்டும் வாழையும்
தமிழே பாடனும்…!
என்று நிறைவுறும்
நான் காணு சொற்பனம்..???
இன்றே உரைத்திடு
உறுதியாய் உரைத்திடு…!!!
நாளைய வேள்விகள்
by nirujah on Dec.15, 2008, under ஈழம், கவிதைகள்
நாம்…!
நேற்றைய செவ்வயல்களில்
தோற்றிய வீரப்புற்கள்
நாளைய வேள்விக்காய்
இன்றே மரணிக்கும்
தருப்பைப் புற்கள்…!
நாளைய வேள்வியின்
சுதந்திர யோதிக்காய்
இன்றே சாம்பராகும்
தன்மானப் புற்கள்…!
இறுதி வேரின்
உறுதித் துகள்
உள்ளவரை
பல பிறவி எடுத்து
நாளைய வேள்வியின்
நாமுமோர் அங்கமாவோம்…!
ஓயாது எங்கள் கரம்…
by nirujah on Nov.30, 2008, under ஈழம், கவிதைகள்
மருந்தாக நின்றவர்
வெளியேறிச் சென்றாலும்…
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்…!
தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை….
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்…!
கொண்ட கொள்கை
வென்றெடுத்து…
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்…!

