ஃபக்கோடா [04-02-11]
by nirujah on Feb.04, 2011, under அனுபவங்கள், ஈழம், பதிவுலகம்
என்னடா இவன் புதுசா ஃபக்கோடாவோட ஆரபிச்சிருக்கிறானே எண்டு யாரும் திட்டாதீங்க. அப்பப்ப போடுற பதிவுகளுக்கு ஏதாவது தலைப்பு வைக்க வேணும் என்டு கன நாலா யோசிச்சு கொண்டு இருந்தனான். நூடுல்ஸ், பர்கர், பாஸ்ட்டா என்டு எல்லா பெயரும் போய்விட, கடைசியில் கடந்த பதிவர் சந்திப்பில் பிரபலமான ஃபக்கோடா தான் மிஞ்சியது. சரி, ஒருத்தரும் அதற்கு இதுவரை சொந்தம் கொண்டாடாதபடியால் இனி அப்பப்ப ஃபக்கோடா வரும். பல நாட்களாக எழுத நினைத்தும், அதற்கும் அதிகமாக ஆணிபுடுங்க வேண்டியிருந்ததால் எழுத முடியவில்லை.
#tnfisherman
இந்த விடயம் பற்றி நான் கீச்சுவில் ஏற்கனவே சொல்லியிருந்ததால், இது பற்றி நிகழ்ந்த எந்தவிதமான விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. தனிப்பதிவும் போடவில்லை.
- இலங்கை மீனவர்களின் வளம் சுரண்டப்படுகின்றது.
- இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி உள்ளேவருகின்றார்கள்.
- பாரிய ரோலர்களில் வருகின்றவர்களினால் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன.
- இலங்கைக் கடற்படை பலவேளைகளில் இந்திய மீனவர்களைக் கைது செய்தும், சிலவேளைகளில் அவர்களைக் கொலைசெய்தும் கொண்டிருக்கின்றது.
- கொல்லப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் வெறும் படகுகளில் வந்து தம் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிப்பவர்கள்.
- இதற்கெல்லாம் முடிவு கச்சதீவை திரும்பப் பெறுவது மட்டும் தான்
- நிருபமாராவ் வருகை.
- தமிழருக்கு பிரச்சனை வரும்போது எப்போதும் ஒரு மலையாளியே இலங்கைக்கு அனுப்பப்படுகின்றார்
இப்படியாக பல கருத்துக்கள் உலாவின. சற்று முன்னர் நான் கேட்ட ஒரு செய்திக்குறிப்பில் வடபகுதி மீனவர்களுக்கு இன்னமும் கடலில் மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படாதவிடத்து, தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வடபகுதிக் கடல்களில் மீன் பிடிக்கிறார்கள் என்பது தான்.
இப்படிப் பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், #tnfisherman என்று இணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அலையைப் பற்றி சிலர், அது ஒரு கண்துடைப்பு, தமிழகத்தின் அரசியல் பின்புலத்தில் உருவானது என்று பல்வேறு வகையாக விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, இந்தப்பிரச்சனையிலாவது இணையத்தில் ஒரு அலை உருவாகியிருக்கின்றது. இதற்கு பின் என்ன நடக்கின்றது என்பதை ஆராய்கின்ற சந்தர்ப்பத்தில், அதன் வலிமை வரவேற்கப்படவேண்டியது. ஒரு விடயம் கவனித்தீர்களா, இதுவரை சுமார் 500 வரையான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்திய(தமிழக), இலங்கைப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாக போடப்பட்டது. ஒரு கட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள் தொடர்ந்து தொழிலுக்கு போகாமல் பகிஷ்கரிப்பும் உண்ணாவிரதமும் இருந்தார்கள். 2003 – 2004 பகுதியில் சன் தொலைக்காட்சி இதை பூதாகாரப்படுத்தியது. இருந்தும் அன்று, இப்போது நாம் விவாதிப்பது போல் நம் இலங்கை மீனவர்களைப் பற்றி பேசவே இல்லை.
ஆக, #tnfisherman என்ற அலை, பலவிடயங்களைப் பற்றி எம்மைப் பேசத்தூண்டி இருக்கின்றது. நாமும் நமது மீனவர்களைப் பற்றி கொஞ்சமாவது பேச முற்பட்டிருக்கின்றோம். இது வெறும் காலமாற்றத்தால் உருவானதாகக்கூட இருக்கலாம். இதனை ஆதரிப்பதோ விமர்சிப்பதோ அவரவர் புரிந்துணர்தலுக்கு இயல்பானது.
சுதந்திர தினம்
இன்று இலங்கைக்கு சுதந்திர தினமாம். நல்லது. அதுவும் 63வது சுதந்திரதினமாம். அது மட்டுமல்ல, 2வது சுதந்திர தினமும் கூடவாம். கடந்த வருடம் சுதந்திர தினம் கண்டியில் கொண்டாடப்பட்டதாம். இம்முறை கதிர்காமம் என்று அழைக்கப்பட்ட கதரகமவில் கொண்டாடப்படுகின்றதாம். ஏனென்றால் இது ஒரு அனைத்து மக்களுக்கும் பொதுவான(?) வழிபாட்டுத் தலமாம்.
இயற்கை
மீண்டும் கிழக்கில் மழையும் குளிர்காலநிலையும் அதிகரித்து விட்டன. கிழக்கின் நீரேந்து பிரதேசங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மீண்டும் மக்கள் அவலங்களை எதிர்நேக்கத் தொடங்கி விட்டார்கள். இன்று காலையில் தான் மன்னர் தனது உரையில், துரித கதியில் முழு அளவில் மக்களுக்கு உதவுவோம் என்று. பாப்பம்.
இது இப்படி என்றால், ஒஸ்ரேலியாவின் குயின்ஸ்லாட் பகுதியை தாக்க ஆரம்பித்த, யாசி என்று பெயர்வைக்கப்பட்ட சூறாவளி இதுவரை பல கோடி மதிப்பான பொருட்சேதத்தை ஏற்படுத்தி உள்ளதோடு இது வரை ஒருவர் இறந்தும் இருவர் காணாமலும் போயுள்ளனர். யாசி தற்போது தொடர்ந்து ஒஸ்ரேலியாவின் குறுக்காக பயனித்துக்கொண்டிருக்கிறது. இது குயின்ஸ்டான்டை தாக்கும் போது, மணிக்கு சுமார் 290 கிமீ வேகத்தில் இருந்தது. இதன் குறுக்களவானது மிகவும் பெரியதாக கிட்டத்தட்ட முழு ஐக்கியராட்ச்சியத்தையே அதற்குள் கொள்ளும் அழவு பெரிதாக உள்ளது.
9 Comments for this entry
1 Trackback or Pingback for this entry
-
Indli.com
February 4th, 2011 on 1:20 pmஃபக்கோடா [04-02-11] « செவ்வானச் சிதறல்கள்……
இப்படிப் பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், #tnfisherman என்று இணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அலையைப் பற்றி சிலர், அது ஒரு கண்துடைப்பு, தமிழகத்தின் அரசியல் பின்புலத்தில் உருவானது என்று பல்வேறு வகையாக விமர்சிக்கிறார்கள்….

February 4th, 2011 on 1:23 pm
முதல் பக்கோடா எனக்கு
February 4th, 2011 on 1:43 pm
February 4th, 2011 on 3:11 pm
பக்கோடாவில் இன்னும் கொஞ்சம் காரமிருந்திருக்கலாம். கதிரகம கந்தனுக்க்கு அரோகரா
February 4th, 2011 on 10:24 pm
சமகால நிகழ்வை தரமாய் தந்தமைக்கு நன்றிகள்…
February 4th, 2011 on 10:37 pm
@வந்தி: விமர்சனத்துக்கு நன்றி. அடுத்தமுறை முயற்சிக்கின்றேன்.
February 4th, 2011 on 11:57 pm
நீங்கள் கூறியதுபோல இதுதான் இலங்கை மீனவர்கள் பிரச்சனைகுறித்து பேசக்கூடிய உகந்த காலமுமாகும்
சுதந்திரம்
)
கிழக்கு மாகாண மக்கள் ரொம்பவே பாவமைய்யா சோதனைமேல் சோதனை
February 5th, 2011 on 10:37 am
பக்கோடா சூடாகவும் மொறு மொறுப்பாகவும் இருந்தது
February 9th, 2011 on 6:35 am
யோவ், முதலில பக்கோடாக்கு முன்னால இருக்கிற ஆயுத எழுத்தத் தூக்குங்கோ….!
February 9th, 2011 on 2:49 pm
@கோபி: ஆயுத எழுத்துத்துடன் சேர்த்துச் சொல்ல இலகுவாக இருக்கு கோபி.