Archive for December, 2010
2010 ஏ புறப்படு
by nirujah on Dec.31, 2010, under அனுபவங்கள், பதிவுலகம்
மில்லேனியம் தனது முதல் தசத்தை இனிதே இன்று நிறைவு செய்கின்றது. தனிப்பட்ட முறையில் இவ்வாண்டு பல்வேறுபட்ட பரந்த அனுபவங்களை எனக்கு கொடுத்திருந்தது. இந்த தசாப்ப்ததின் இறுதிப் பதிவை எனது முகப்புத்தகதில் நான் போட்ட நிலைகளுள் சிலவற்றை மீண்டு முடிக்கின்றேன்.
டேய்…! யார்ரா அங்க… 2 நாளைக்கு லண்டன்ல மழை பெய்யபோகுது…! கொட எல்லாம் வெளியில எடுத்து தூச கீச தட்டி வைங்கடா…! அண்ண நாளைக்கு தோட்டத்துக்கு போகணும்..! மொக்கை
மறுபடியும் பசிக்குதே…! இது வரை முகப்புத்தகத்தில் இறுதியாக உள்ள நிலை.
முகப்புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வபோது கவிதை என்ற பெயரில் போட்டவை:
என் உணவு வேளைகளின்
புரையேறும் நிமிடங்களைக் கேட்டுப்பார்…!
உன் நினைவலைகள் என்னைத்
தாக்கட்டுமே என்று நீர் அருந்துவதே இல்லை…!
இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்….
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்செல்கிறாயே…..???
கடலலையே….!!!
நீயும் பெண்ணின் அம்சமோ…
தெளிந்த வானமாய் ஓர் மனம் வேண்டும்….!
அதில் ஒரே சூரியனாய் நீ வேண்டும்.
உன்னொளி பெற்று நான் மதியாக வேண்டும்…!
பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே.மட்டுமல்ல
காதலின் பொழுது போக்கும் கூட…
It’s really hard for me to accept….!
You were with me when I was stressed…!
When I needed some one…!
When I wanted to pass my time…!
But…. Things has to change…!
And you cant be with me any more….!
நம்முடைய முதல் சந்திப்பு
என்னுடைய முதல் தோல்வியின்
பரிசாய்க் கிடைத்தது..! அன்று முதல்,
நம் முதல் ஸ்பரிசம்,
என் உதடுகளில் நம்முடைய முதல் முத்தம்..!
அந்த நறுமணம்..!
எனக்குத் தெரியும்..;
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும் எனக்காக நீ மரணித்தாய் என்று..!
காற்றுடன் கலந்த அந்த கடற்கரைப் பொழுதுகள்…
கல்லூரியின் பின் புறம்…!
சாரலாய் பெய்த மழையின்
மண்வாசத்தோடு சேர்ந்த உன் அருகாமை;
எப்படித்தான் முடியுமோ உன்னைவிட்டு நீங்க என்னால்..!
என் 10ம் வயதில் திருட்டுத்தனமாய் செய்ய முயன்றாலும்…!
இருபதின் ஆரம்பத்தில் என் கன்னி கழித்தவள் நீ தான்….!
அன்று முதல் எத்தனை பேர்…! விதம் விதமாய்…!
நீயாய்…, உன் தோழிகளாய்…, சகோதரிகளாய்…,
உள்நாடு… வெளிநாடு… என எத்தனை வகைகளாய்…!
கையில் ஒன்றுமே இல்லாத போது நன்பர்களிடன்
கடனாய் என… நீ ஏதாவது ஒரு உருவத்தில் தினம் கலந்துகொண்டே இருந்தாய்…!
அன்புள்ள அத்தை மகளே…! அழகே நினைவிருக்கா…!
உன் அத்தான் சீமை சென்று ஆறு மாசம் ஓடிபோச்சே…!
இத்தனை நாள் பிரிந்திருந்தும்
கழுதை உன்னை மறக்கலையே…!
இரண்டு நாள் கதைக்காட்டி நீயாரென்று கேக்கிறியே…!
பாத்தவுடன் சோழி செய்ய காத்திருடி கண்ணழகே…!
வாழ்க்கை வெறுக்குதடி…
சாகத் தோணுதடி…
சுற்றம் சலிக்குதடி…
மெத்தப் புளிக்குதடி
என்றும் நீ சொல்வது போல்…
எல்லாம் போலியடி…
போலிக்குள் ஒருவனாக…
வாழ மன ஒக்கவில்லை…
எல்லோர்க்கும் நானொருவன்…
வெறும் துருப்புச் சீடாய் பேனேனடி…
தம் வேலை முடிந்தவுடன்…
தூக்கி எறியும் உலகமடி…
அமேசனின் நீரேந்து பிரதேசங்களின்
மழைபோல் முத்தங்கள் கிடைக்கின்ற நாட்டில்…,
சகாராவின் சாரல் கூட
கிடைக்க முடியாதபடி செய்தவளே…
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பதிவர் பொங்கல்
by nirujah on Dec.31, 2010, under பதிவுலகம், வேறு
எத்தனை முறை சிலருடன் பழகினாலும் சலிக்காது. மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசவேண்டும் போல் தோன்றும். சில நேரம் கடந்த 25 ஆண்டுகளாக என் தேடலில் சிக்காத வட்டம் ஒன்றுடன் நான் இப்போது பழக்கிக்கொண்டிருக்கின்றேனோ தெரியாது. ஆனால் தொடர்ந்து பேசவேண்டும். பல விடயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டிருக்கின்றது.
“காரணம் இருக்காது ஆனால் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது” காதலிப்பவர்கள் பேசக்கேட்டிருக்கின்றேன். இதுவும் அப்படியோ தெரியவில்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ள இந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல மனம் வரவில்லை. இந்த மகிழ்ச்சி மனதுக்கு இதமாக இருக்கின்றது. என்னுடைய இயந்திரமயமான வாழ்வில் தொன்றலாய் ஊடுருவியுள்ளது.
இவ்வாறெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த வேளை தான் பொங்கல் பற்றிய எண்ணம்
தோன்றியது. பதிவர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏன் வருகின்ற பொங்கலைக் கொண்டாடக் கூடாது. ஏற்கனவே பல அதிகார மையங்கள் முளைத்து நிற்கின்ற வேளையில் இதற்கும் அதிகார மையச் சாயம் பூசுவதற்கோ அல்லது மதச் சாயம் பூசுவதற்கோ பலர் வருவார்கள் என்பது எனக்கு தெரியும். பொதுவாகவே எனக்கு மத நம்பிக்கை இல்லை. சமயங்களின் ஊடாக இறைவனுடன் பேசும் பக்குவமும் எனக்கு இல்லை. பிறப்பால் இந்துவான எனக்கு சித்திரைப் புத்தாண்டிலோ, தீபாவளியிலோ பெரிதாக ஈடுபாடு கிடையாது. தவிர, எனக்கு கிறீஸ்தவ நண்பர்களும் இருக்கிறார்கள். இஸ்லாமிய நண்பர்களும் இருக்கின்றார்கள். நத்தாருக்கு அவர்களின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்திருக்கின்றேன். நோன்பு தினங்களில் நண்பர்கள் வீட்டில் நோன்புக்கஞ்சியும் குடித்திருக்கின்றேன். அதிகார மையத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அப்படி ஒன்றும் உண்மையாக இல்லை.
மற்றவர்கள் பொங்கலை எப்படிப் பார்க்கின்றார்களோ தெரியாது. ஆனால் நான் பொங்கலை ஒரு தமிழ் பண்டிகையாகவே பார்க்கின்றேன். இதை யார் வேண்டுமென்றாலும் கொண்டாடலாம். தவிர, நான் இந்தியாவில் இருந்த சமயத்தில், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் கூட பொங்கலை சிறப்பாக கொண்டாடியதை நேரிலே பார்த்திருக்கின்றேன். நெகிழ்ந்திருக்கின்றேன். ஆக, தமிழ் பதிவர்கள் என்ற வட்டத்துக்குள் இருக்கும் நாமும் பொங்கலை சிறப்பாக கொண்டாட முடியும்.
இதில் பல நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதை நான் அறிவேன். அனேகமாக அனைவரும் எமது வீடுகளில் பொங்குவோம். வீடுகளுக்கு விருந்தினர்கள் வருவார்கள். நாம் எமது அயலவர், உற்றார், உறவினர் வீடுகளுக்கு செல்வோம். இப்படி பல்வேறு பட்ட நிகழ்வுகளிலே நாம் அனைவரும் ஈடுபவோம். இருந்தாலும், முடிந்தால் 15ம் திகதி காலைப் பொழுதில், நாம் அனைவரும் சேர்ந்து ஓர் இடத்தில் பொங்கலைக் கொண்டாடினால் என்ன? ஒத்த கருத்துள்ளோர் சேர்ந்தாலே போதும். இதைச் சிறப்பாக கொண்டாடியதாகவும் இருக்கும். நாம் மீண்டும் ஒருமுறை சந்தித்ததாகவும் இருக்கும். முடிவை உங்கள் கைகளில் விட்டுவிடுகின்றேன்.
இரயில் பயணத்தில் ஓர் கிளிநொச்சி அனுபவம்
by nirujah on Dec.15, 2010, under அனுபவங்கள், ஈழம்
இது வரை நான் எழுதிய பதிவுகளில் இது சற்றே வித்தியாசமானது. தற்போது 15ம் திகதி, மார்கழி மாதம் 2010, அதிகாலை 2:42. கொழும்பிலிருந்து வவுனியா மற்றும் தாண்டிக்குளம் நோக்கிச் செல்லும் இரவுத் தபால் தொடரூர்ந்தில் மூன்றாம் வகுப்பு இருக்கை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். என்னைச் சூழ சுமார் பத்து பயணிகள் இருக்கின்றார்கள். இவர்களுள் இரு முதியவர்கள் தனித் தனியே வந்தவர்கள். ஐந்து பெண்களும் ஒரு ஆண்ணுமாக இன்னொரு அறுவர் கொண்ட குழு தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அறுவரிடமும் நான் பேசியதையே இந்த பதிவில் தரலாம் என இருக்கின்றேன்.
பதிவர் சந்திப்பு 2010 ;)
by nirujah on Dec.09, 2010, under பதிவுலகம்
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதவாறு நாடு முழுவதும் மழை கொட்டிவருவது போல், பதிவுலகத்திலும் ஓர் புத்துணர்ச்சி பரவி பதிவுகளும் பின்னூட்டங்களும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. சீரியஸ் பதிவாக இருந்தாலும், மொக்கைப் பதிவாக இருந்தாலும் அனைத்துமே சுவாரஷ்யமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இந்த காலகட்டத்தில் பதிவர்களுக்கிடையேயான நெருக்கம் அவர்கள் பரிமாறிக்கொண்ட பின்னூட்டங்களிலும் தொடர்பதிவு அழைப்புகளிலும் சிறப்பாகவே தெரிந்தது. இதன் உச்சக்கட்டமாக வருகின்ற மார்கழி 19ம் திகதி ( 19 Dec 2010 ) பதிவர் சந்திப்பு ஒன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மன மகிழ்வுடன் தெரிவுத்துக்கொள்கின்றோம்.
நீண்டநாட்களாக செயற்படுத்த முயன்று முயன்று ஏதோ காரணங்களால் தடைப்பட்ட பதிவர்களாகிய எமது சந்திப்பு நடைபெறுவதற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத வேளையில், பதிவர் சந்திப்பு பற்றிய சிறிய விளக்கத்தை கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில், அனைத்து இலங்கைத் தமிழ் பதிவர்கள், பதிவுலக ஆர்வளர்கள், வாசகர்கள், ஊடகவியளாலர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.
நிகழ்வு: பதிவர் சந்திப்பு 2010
திகதி: 19-12-2010
நேரம்: காலை 09:31
இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
நிகழ்ச்சி நிரல்
- அறிமுகவுரை
- பதிவர்கள் அறிமுகம்
- கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
- கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
- இடைவேளையில் இன்னிசை.
- கலந்துரையாடல் 3 – பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
- கலந்துரையாடல் 4 – பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
- பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.
- நன்றியுரை.
எனவே அனைவரையும் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வரவேற்கின்றோம்.
இந்த பதிவர் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை நிரூஜா, வதீஸ், அனுதினன்,வரோ, அஷ்வின், பவன். ஆகிய ஏற்பாட்டு குழு அங்கதவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். வெளியூரிலிருந்து வந்து கலந்து கொள்ள விரும்புவோரில் தங்குவதற்கு இடவசதி தேவைப்பட்டால் 13ம் திகதிக்கு முன்னதாக அஷ்வின்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு 2010 இற்கு Earthlanka நிறுவனத்தினர் அனுசரணை வழங்குகின்றனர் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த பதிவர் சந்திப்பை ஒட்டி, காணொளி ஒன்றும், பல அளவுகளில் அசையும் மற்றும் அசையா தட்டிகளும் உருவாக்கியிருக்கின்றோம். தயவு செய்து அவற்றை உங்களுடைய வலைபூவில் தவழவிடுவதன் மூலம் உங்களின் ஆதரவை தெரிவித்து எம்மைப் பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பதிவர் சந்திப்பு தொடர்பான தட்டிகளுக்கான வரைகள் இந்த இணைப்பிலே கிடைக்கப்பெறும்.
தென்னங்கீற்று இடையழகே…!
by nirujah on Dec.02, 2010, under கவிதைகள்
மலைகளெல்லாம்
எழுந்து நின்று;
மழை முகிலை
ஒன்று கூட்ட…!
மலர்வாசம்
பிழிந்தெடுத்து; - நறு
மணத்தென்றல்
உருவாக…!
தென்றலதன்
மென்மை கண்டு;
தேம்பி முகில்
கண்கசிய…!
தென்றலவள்
வருகைக்காய்;
தெருமுனையில்
காத்திருந்தேன்…!
தென்றலென
அழைத்தாலும்;
கூடிச் சண்டை
பிடித்தாலும்…!
தென்னங்கீற்று
இடையழகே;
நீயெனக்கு
உயிரம்மா…!
உன் மேனி
நிறை ஓவியமெலாம்;
ஒன்றையொன்று
உயர்த்தி நிற்கும்…!
எத்துணை தான்
அழகாக உன்;
மேனியெலாம்
மிளிர்ந்தாலும்…!
உன் செவ்விதழில்
பூத்திருக்கும்;
புன்னகைக்கு
நிகருமுண்டோ…!
